ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சாட்டிலைட் துறை முகம் அமைக்க மத்திய அரசு ஆர்வம்

 ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சாட்டிலைட் துறை முகங்களை அமைக்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டிவருகிறது. நேரடியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிசெய்ய பல வசதிகளை வழங்கும் இந்த சாட்டிலைட் துறை முகங்களை உருவாக்க 300 ஏக்கர்கள் நிலம்தேவை. ஏற்கனவே, காஷ்மீர் மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்களை செயல் படுத்த உள்ள மத்திய அரசு அங்கு ரூ.600 கோடி செலவில் நெடுஞ்சாலைகளில் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது .

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது; நான் ஏற்கனவே காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் ஜியிடம் சொல்லியிருக்கிறேன். ஜம்முகாஷ்மீருக்கு 2 சாட்டிலைட் துறை முகங்களை வழங்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை, நதிகள் மற்றும் ரெயில் போக்கு வரத்து வசதிகளை அருகாமையில் கொண்டுள்ள இரண்டு இடங்களை தேர்வு செய்யுமாறு ஏற்கனவே காஷ்மீர் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தபடி மத்திய அரசு அங்கு அடிப்படைகட்டமைப்பு வசதிகள், நெடுஞ்சாலை திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்க திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் பொருளா தாரத்தையும் உயர்த்த மத்திய அரசு அதிக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதே போல், நெடுஞ் சாலைகளில் சாலையோரங்களில் பெட்ரோல் பல்குகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பெவிலியன்கள், சுற்றுலாபயணிகளை கவரும் கைவினை பொருட்கள், பழக்கடைகளை அமைக்க 50 ஏக்கர்கள் நிலத்தை காஷ்மீர் அரசு ஒதுக்கியுள்ளது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தால் ஏரி உட்பட காஷ்மீரின் பலஏரிகளில் சரக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த காஷ்மீர் அரசு முன்வரவேண்டும். நான் கடந்தமுறை இங்கு வந்தபோது ஆறு மற்றும் ஏரிகளில் மணல் தேங்கி இருப்பதை அறிந்து கொண்டேன். இதனால் தான் மழைபெய்த பிறகு வெள்ளம் ஏற்படுகிறது. ஆறுகளை தூர்வார ஏற்கனவே மாநில அரசிடம் ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. ஏரிகளை ஆழப்படுத்துவதால் வெள்ளஅபாயம் குறையும். நாம் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து பாதைகளை மேம்படுத்தி வருகிறோம். ஆறுகளை தூர் வாரி அவற்றை ஆழப்படுத்தி ஆறுகள் மற்றும் ஏரிகளை போக்குவரத்திற்காக பயன்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்க்கொண்டு வருகிறது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...