கும்பகோணத்தில் 2016, பிப்ரவரியில் நடைபெறவுள்ள மகாமக விழாவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறியது: கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடைபெற இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்தவிழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்கவுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்துதர வேண்டும்.
இந்த விழாவை சிறப்பாக நடத்த மத்தியரசு அனைத்து உதவிகளையும் செய்யும். தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தவறாக பேசிவிட்டேன் என கூறியிருந்தால், இந்தளவுக்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. அவர் தனதுபோக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தரம் தாழ்ந்து விட்டது. பாஜக. ஆட்சிக்குவந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார் இல. கணேசன்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.