ஹஜ் பயண, விண்ணப்ப படிவங்கள் இலவசம்

‘ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்பபடிவங்களை இலவசமாக பெற்று கொள்வதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், அனைத்து வசதிகளையும் செய்துதந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி’ என, இந்திய ஹஜ்அசோசியேஷன் தலைவர் ‘பிரசிடென்ட்’ அபூபக்கர் தெரிவித்துள்ளார்

இந்தாண்டு ஹஜ் புனிதபயணம் மேற்கொள்ளும் பயணியருக்கான புறப் பாட்டு இடங்கள், 10ல் இருந்து 25 ஆக உயர்த்தி, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்ப படிவங்களை எவ்வித கட்டணமும் இல்லாமல், இலவசமாக பெற்றுகொள்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் புனித பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், அவர்களுக்கான பொருளாதார விலக்கும் அளிக்கப் படுகிறது.

இதற்கு முன், ஒருகுறிப்பிட்ட தொகையை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் முன் கூட்டியே செலுத்த வேண்டும். தற்போது போர்வை, குடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, அவர்களே சொந்தமாக எடுத்து வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஒவ்வொரு பயணிக்கும் 50 ஆயிரம் ரூபாய் செலவுமிச்சம். மேலும், முன்கூட்டியே செலுத்த வேண்டிய வைப்பு தொகை குறைக்கப் பட்டுள்ளது. இதனால், 36 கோடி முஸ்லிம்கள் பயன்பெறுவர்.

விண்ணப்பம் இலவசம், வைப்புதொகை குறைப்பு, பயண ரீதியான உதவிகள் ஆகிய அனைத்தையும் மத்தியஅரசு செய்திருக்கிறது. இதற்கான உத்தரவை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஹஜ் பயணம்செல்வோர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் குறித்து, மத்திய அரசு, சவுதி அரசுடன் பேச்சு நடத்திஇருக்கிறது.

இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை, மத்திய சுகாதாரதுறை, மாநில ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டி, வெளியுறவு துறை அமைச்சகம், சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் கூட்டுபேச்சும் நடந்துள்ளது. ‘ஆன்லைன்’ வாயிலாக, இனி அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கூடுதல்வசதி செய்துதர முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்புதலை, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப் பூர்வமாக, லோக்சபாவில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும்வகையில், அனைத்து வசதிகளையும் செய்துதந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...