மெக்கா கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு

 மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியான ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான்மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக் கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்ட போது நெரிசல் ஏற்பட்டது. ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்துசெல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத்திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர்.

பிற்பகல் 220 பேர் இறந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும் சவுதி அரேபிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்தவண்ணம் உள்ளது.

மாலை நிலவரப்படி 700 பேர் பலியானதாகவும், 719 பேர் காயமடைந்த தாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அமெரிக்காவில் இருந்து டுவிட்செய்துள்ளார்.

நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...