மெக்கா கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு

 மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியான ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான்மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக் கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்ட போது நெரிசல் ஏற்பட்டது. ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்துசெல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத்திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர்.

பிற்பகல் 220 பேர் இறந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும் சவுதி அரேபிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்தவண்ணம் உள்ளது.

மாலை நிலவரப்படி 700 பேர் பலியானதாகவும், 719 பேர் காயமடைந்த தாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அமெரிக்காவில் இருந்து டுவிட்செய்துள்ளார்.

நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...