பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது

பண மதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு உதவும் விதமாக நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பயிர்கடன் வட்டியை தள்ளுபடி செய்யலாம் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 2016-ம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கான பயிர்க்கடன் வட்டி ரூ.660.50 கோடி தள்ளுபடி செய்கிறது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.400 கோடி கடன்வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மீள விவசாயிகளுக்கு இது வழிவகை செய்யும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய குறுகிய கால பயிர்க்கடனுக்கான நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான வட்டி ரூ. 660.50 கோடியை தள்ளுபடிசெய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

நடப்பு நிதியாண்டின் குறுகியகால கடனுக்கன வட்டி மானியம் அளிக்கவும், விவசாயிகளுக்கு மறுகடன் வழங்குவதற்கு ஏற்பவும் ரூ.1060.50 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபிறகு நவம்பர் டிசம்பர் மாதங்களில் பயிர் கடன் செலுத்திய விவசாயிகளுக்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அவர்களது வங்கிகணக்கில் வட்டி தொகை செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2016-17 நிதியாண்டில் மட்டும் இதுவரையில் 15,000 கோடி ரூபாய் வட்டிமானிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு குறுகியகால பயிர்கடன் ரூ.3 லட்சம் கோடியை 7 சதவீத ஆண்டுவட்டியில் அளிக்கிறது. முறையாக திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத ஊக்க்கதொகையும் வழங்குகிறது. மத்திய அரசு ரூ.9 லட்சம் கோடிக்கு பயிர் கடன் இலக்குவைத்துள்ளது. அதில் செப்டம்பர் மாதம் வரை ரூ.7.56 லட்சம் கோடியை அளித்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...