ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைதுவங்கியதை நேரில் ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை’ என தெரிவித்தார்.

இந்தியாவில் சோதனை செய்யபட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடுமுழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம்முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகையை, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நேரில் ஆய்வுசெய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். பின் பேசிய அவர், குறுகியகாலத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. போலியோவை விரட்டியதுபோல, கெரோனாவையும் நாட்டைவிட்டு விரட்டுவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா பரவதுவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்புபணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில்தான் இறப்புவிகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகியகாலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சிலநாட்களில், இந்த தடுப்பூசிகளை நம்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப் பட்டது. தற்போது, நாடுமுழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சென்னை, மத்திய மருந்துகிடங்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் ஆய்வுசெய்தார். பின், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது : சென்னையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை 3 இடங்களில் ஆய்வுசெய்தேன். கொரோனா தடுப்பூசிபணிகள் திருப்தியையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...