ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைதுவங்கியதை நேரில் ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை’ என தெரிவித்தார்.

இந்தியாவில் சோதனை செய்யபட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடுமுழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம்முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகையை, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நேரில் ஆய்வுசெய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். பின் பேசிய அவர், குறுகியகாலத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. போலியோவை விரட்டியதுபோல, கெரோனாவையும் நாட்டைவிட்டு விரட்டுவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா பரவதுவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்புபணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில்தான் இறப்புவிகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகியகாலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சிலநாட்களில், இந்த தடுப்பூசிகளை நம்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப் பட்டது. தற்போது, நாடுமுழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சென்னை, மத்திய மருந்துகிடங்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் ஆய்வுசெய்தார். பின், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது : சென்னையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை 3 இடங்களில் ஆய்வுசெய்தேன். கொரோனா தடுப்பூசிபணிகள் திருப்தியையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...