மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்

 மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில்கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

மராட்டிய மாநிலம் லத்தூரில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக 375 கிமீ. தூர பாதயாத்திரை மேற்கொண்டது. இதன் நிறைவுவிழா நேற்று அவுரங்காபாத்தில் நடந்தது. இதில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு 5 கிமீ. தூரம் விவசாயிகள், தொண்டர்களுடன் நடந்துசென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:–

மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில்கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்படும்பகுதியில் விவசாயிகள் மேம்பாடு அடைய வழிவகை ஏற்படும்.

பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லாகடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாஜக.,வுக்கு வாய்ப்பு அளிக்க மக்கள் முடிவுசெய்து விட்டார்கள். பாரதீய ஜனதாவின் செயல்பாடுகள் தங்களை பாதுகாக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஆட்சியையும், இப்போது மத்தியில்ஆளும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டுப்பார்த்து வருகிறார்கள். பாரதீய ஜனதாவால் மட்டுமே நல்லாட்சி வழங்கமுடியும் என்று கருதுகிறார்கள்.என்று ராஜ்நாத்சிங் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...