விவசாயிகள் தற்கொலைக்கு முந்தைய ஆட்சியிலும் காதலை காரணமாக கூறினர்

 மத்தியவேளாண் மந்திரி ராதா மோகன் சிங் நேற்று முன்தினம் டெல்லி மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது, 'விவசாயிகளின் தற்கொலைக்கு காதல்விவகாரம், வரதட்சணை, ஆண்மைக் குறைவு, குடும்ப பிரச்சினைகள், வியாதி, போதைபழக்கம், வேலையின்மை, சொத்து தகராறு, பணி தொடர்பான பிரச்சினைகள், திருமணம் நின்றுபோதல், பெயர் கெட்டுப்போதல் மற்றும் வெளியேதெரியாத காரணங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது' என்று கூறினார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கி . எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, வேளாண் மந்திரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும், விவசாயிகள் தற்கொலைக்கு பாராளு மன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 30ந் தேதி, அப்போதைய வேளாண் இணைமந்திரி சரண்தாஸ் மகந்த், டெல்லி மேல்சபையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு காதல் விவகாரத்தையும் காரணமாக கூறினார்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, அப்போதைய மத்தியவேளாண் மந்திரி சரத் பவார், மக்களவையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு காதல்விவகாரம், வேலையின்மை, சொத்து தகராறு, திடீரென வறுமைநிலைக்கு தள்ளப்படுதல், பணிபிரச்சினைகள், ஆண்மைக் குறைவு, திருமணம் நின்று போதல், வரதட்சணை தகராறு, பெயர் கெட்டுபோதல் ஆகிய காரணங்களை கூறினார்.

2014-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி, அப்போதைய மத்திய வேளாண் இணைமந்திரி தாரிக்அன்வர், டெல்லி மேல்சபையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு இதே காரணங்களை தெரிவித்தார்
என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...