ராமர் கோயிலை கட்டுவதற்காக நான் மேற்கொண்ட ரத யாத்திரை சரி – எல்.கே. அத்வானி அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலை கட்டுவதற்காக நான் மேற்கொண்ட ரத யாத்திரை சரி என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.
ராமர் கோயில் கட்டுவதற்காக பிரசார தளபதியாக-செயல்பட்டு 1989-ல் ரத யாத்திரை மேற்கொண்டார் தலைவர் எல்.கே. அத்வானி. இந்த ரத யாத்திரை இந்திய அரசியல் களத்தில் மிக பல திருப்பங்களை ஏற்படுத்தியது. ÷இந்தத் தீர்ப்பின் மூலம் எனது ரத யாத்திரையின் நோக்கம் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அலாகாபாத் உயர் நீதிமன்ற-தீர்ப்பு சட்ட அடிப்படையிலானது என்பதைவிட நம்பிக்கையின் அடிப்படையிலானது/ என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார். இந்தத் தீர்ப்பின் மூலம் மக்களின் நம்பிக்கைக்கு, சட்டம் அங்கீகாரம் வழங்கி உள்ளது என்பதுதான் உண்மை என்றார். “ராமஜென்ம பூமி வளாகத்துக்கு வெளியே முஸ்லிம்கள் மசூதியை கட்டலாம் என்ற பாஜக தலைவர் நிதின் கட்கரியின் கருத்து சரியானது “ ஃபைஸôபாதில் சரயு நதிக்கரையில் மசூதி கட்டலாம் என்றும் அத்வானி யோசனை தெரிவித்தார்.-ஒரு மணி நேரம் அவர் அளித்த பேட்டியில் தீர்ப்பை கொண்டாடும் வகையிலோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.