கருப்பு பணத்தை மீட்டால் தலைக்கு ரூ.15 லட்சம் வரும் என்றே கூறினோம்

 வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒட்டு மொத்த கருப்பு பணத்தையும் வகுத்தால், அது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் என்றளவில் இருக்கும் என்ற கருத்தையே கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் முன்வைத்தார்.

அந்தப்பணத்தை மக்கள் நல பணிக்களுக்காக செலவிடமுடியும் என்பதே அவர் கூறியதன் அர்த்தமாகும். மக்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் நேரடியாக செலுத்தப்படும் என்பது அதற்கு அர்த்தமல்ல.

பொதுக் கூட்டங்களில் தலைவர்கள் பேசும் போது சிலநேரங்களில் உணர்ச்சிவசப் படுவார்கள். எனவே, அவர்களின் பேச்சுக்களுக்கு அப்படியே நேரடிஅர்த்தம் கொள்ளக்கூடாது. மேலும், அரசு கருவூலத்தில் இருந்து மக்களின் வங்கி கணக்குகளில் எப்படி பணம்செலுத்த முடியும்?

உத்தரப் பிரதேச மாநில போலீஸாரின் ஒரு தலைப் பட்சமான செயல் பாடுகளின் காரணமாகவே, தாத்ரி சம்பவம் நிகழ்ந்தது. போலீஸார் மதப்பாகுபாடுகள் இன்றி செயல் பட்டிருந்தால், இத்தகைய சம்பவங்கள் நிகழாது. மேலும், தாத்ரி சம்பவத்தில் உத்தர பிரதேச அரசைக் குற்றம்சாட்டுவதற்கு ஊடகங்களுக்கு தைரியமில்லை.

தாத்ரி படுகொலை குறித்து கருத்துதெரிவித்த பிறகும், எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பியளித்து வருகின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பெரும்பாலான எழுத்தாளர்கள், மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என்று பிரசாரம் செய்தனர். அதையும் மீறி, மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பீகாரில் வென்றால் யாருக்கு முதல்வர்பதவி என்பது குறித்து பாஜக இது வரை தனது கூட்டணிகளுக்கு யாரையும் சுட்டிக் காட்டவில்லை’ . ‘மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் முதல்வர் வேட்பாளர் அறிவிக்காமல் வெற்றிபெற்று, பின்னர் முதல்வரை தேர்வு செய்தோம்’ .

‘பீகாரில் நல்ல அனுபவம்வாய்ந்த தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். அதனால் அங்கு நல்லாட்சி தரமுடியும். பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி யிருப்பதை மறைப்பதற்காக, மாட்டிறைச்சி விவகாரத்தை பெரிதாக்கி இருக்கிறார் லாலு’

"இந்தியா டிவி' என்ற செய்தி தொலைக் காட்சிக்கு சனிக்கிழமை அளித்த நேர்காணலில் அமித் ஷா கூறியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...