ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி இருப்பதே அரசின் நோக்கம்

ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம். மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் சார்பில், ‘தலைமைத்துவ உச்சி மாநாடு – 2024’ நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், 100 ஆண்டுகளைக் கொண்டாடும் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் நாளிதழ் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

உலகம் முழுதும் நிச்சயமற்ற, உறுதியற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இந்த சூழலில், நம் நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக, என் அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். காங்., ஆட்சிக் காலத்தில், அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அரசு நடத்தப்பட்டது. ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த வகை அரசியலால், நாட்டில் சமச்சீரற்ற, சமத்துவமின்மை அதிகரித்தது. இது, அரசு மீதான மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது. இந்த நம்பிக்கையை தற்போது நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம்மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம். இதை அடிப்படையாக வைத்து, நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறோம்.

மத்திய அரசு, முதலீட்டின் வாயிலாக தனித்துவமான வேலைவாய்ப்பையும், வளர்ச்சியின் வாயிலாக கவுரவத்தையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. பா.ஜ., அரசின் அணுகுமுறை, மக்களுக்காக பெரியளவில் சேமிப்பதும், செலவு செய்வதும் ஆகும்.

அண்டை நாடுகளின் பயங்கரவாதத்தால், சொந்த வீடுகளிலும், நகரங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்தோடு மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறி விட்டது. சொந்த இடத்திலேயே பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த நுாற்றாண்டு இந்தியாவின் நுாற்றாண்டாக இருக்கும். வளர்ச்சியின் வேகத்தை நம் நாடு தக்கவைத்துக் கொள்ளும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...