இளைஞர்களின் கனவை நனவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கிறோம்

கடந்த வெள்ளிக் கிழமை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தொழில் நுட்ப மாநாட்டில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய தாவது: இளைஞர்களின் கனவை நனவாக்கும் வாய்ப்புகளை மத்தியஅரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழில் முனைவுச் செயல் பாட்டையும் முதலீட்டையும் ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒரேவிதமான வெளிப்படைத் தன்மையில் செயல்படவில்லை. சில மாநிலங்கள் அதன் கடந்த காலத்தை இன்னும் பற்றிக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட்டால், தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளின் பட்டியலில் 63-வது இடத்திலிருந்து 1-வது இடத்துக்கு முன்னேறும்.

தொழில்நுட்பங்கள் மூலம் சாமானியமக்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இன்று மத்திய அரசு மானியம் இடைத்தரகரின் கைகளுக்குச் செல்லாமல் நேரடியாக மக்களின் கைகளுக்கு செல்கிறது. தொழில் நுட்பம் சாமானிய மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றிஅமைக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...