பாஜக நிர்வாகி காலில் விழுந்த பிரதமர் மோடி

நாட்டிலேயே பெரியமாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்டதேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

அடுத்த வரும் ஜன. 23இல் அடுத்தகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்தத்தேர்தலில் மத்திய உபி-இல் உள்ள 9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிரமுயற்சி எடுத்து வருகிறது. அங்கு தற்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே எந்தவொரு கட்சியும் ஆட்சியை தக்கவைத்தது இல்லை. இதனால் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் பல்வேறு தலைவர்களும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜகவின் உ.பி. மாநிலதலைவர் சுதந்திர தேவ்சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ராமர் சிலையைப் பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அதன்பின்னர் உன்னாவ் மாவட்ட தலைவர் பாஜக அவதேஷ் கட்டியார் பிரதமரின் பாதங்களைத்தொட்டு வணங்கினார்.

அவரை தடுத்த பிரதமர் மோடி, யாரும் யார்காலிலும் விழக்கூடாது என்று விளக்கினார். மேலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் மேடையிலேயே பிரதமர் மோடி, அவதேஷ் கட்டியார் காலில்விழுந்தார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் காலில் தொண்டர்கள் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் விழுந்துவணங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தவறான செயல் என்பதை விளக்கும்வகையில் பிரதமர் செய்த இச்செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

அவதேஷ் கட்டியார் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவால் உன்னாவ்மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்குமுன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொது செயலாளராக இருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...