தனது புது கொள்கையின்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குற்றவாளியாக பிரதமர் மன்மோகன் சிங் சித்திரித்துள்ளார் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
2008 நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், குற்றச்சாட்டு
எழுப்பியவர்களை அடுத்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.
இது குறித்து தனது வலைப்பூவில் (இணையதள பிளாக்) அத்வானி குறிப்பிட்டுள்ளதாவது:
தேர்தலுக்கு முன் குற்றம் இழைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்தக் குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது?
பிரதமர் கூறிய இதுபோன்ற அபத்தமான கொள்கை எப்படிப்பட்ட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துள்ளரா?
1989 தேர்தலுக்கு முன், போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் புதிய கொள்கைப்படி, போபர்ஸ் விவகாரத்தில் ராஜீவ் காந்தி குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளது அந்த விவகாரத்தை மூடி மறைக்கும் செயலாகும்.
பாகிஸ்தான் விஷயத்தில் தனது அரசிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டது விக்கிலீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.
பயங்கரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் கருத்தை மதிப்பீடு செய்தால் மக்களிடம் இருந்தும் அவர் தனிமைப்பட்டுள்ளது தெரியவரும் என்று அத்வானி தெரிவித்துள்ளார்
{qtube vid:=aYIxgQyGzwU}
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.