தனது புது கொள்கையின்படி ராஜீவ் காந்தியை குற்றவாளியாக பிரதமர் மன்மோகன் சிங் சித்திரித்துள்ளார்

தனது புது கொள்கையின்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குற்றவாளியாக பிரதமர் மன்மோகன் சிங் சித்திரித்துள்ளார் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

2008 நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், குற்றச்சாட்டு

எழுப்பியவர்களை அடுத்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.

இது குறித்து தனது வலைப்பூவில் (இணையதள பிளாக்) அத்வானி குறிப்பிட்டுள்ளதாவது:

தேர்தலுக்கு முன் குற்றம் இழைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்தக் குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது?

பிரதமர் கூறிய இதுபோன்ற அபத்தமான கொள்கை எப்படிப்பட்ட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துள்ளரா?

1989 தேர்தலுக்கு முன், போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் புதிய கொள்கைப்படி, போபர்ஸ் விவகாரத்தில் ராஜீவ் காந்தி குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?

இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளது அந்த விவகாரத்தை மூடி மறைக்கும் செயலாகும்.

பாகிஸ்தான் விஷயத்தில் தனது அரசிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டது விக்கிலீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் கருத்தை மதிப்பீடு செய்தால் மக்களிடம் இருந்தும் அவர் தனிமைப்பட்டுள்ளது தெரியவரும் என்று அத்வானி தெரிவித்துள்ளார்

{qtube vid:=aYIxgQyGzwU}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...