நாம அதிகம் விரும்பி சாப்பிடும் கரும்பில் , கடினமான நார் இழைகள் இருக்குது. இந்த நார் இழைகள்ல தான் சுக்ரோஸ்ங்கிற சர்க்கரை சேமித்து வைக்கப்பட்டிருக்கு. மனிதனோட நாக்கு, கோழைப்படலத்தால சூழப்பட்டு, வெளிர் சிவப்பு நிறத்துல ஈரத்தோட இருக்கும். வெல்வெட் மாதிரி இருக்குற நாக்கோட மேற்பரப்பை, சுவை முகிழ்ப்புகள் போர்த்தி இருக்குது.
அதுமட்டுமல்ல, நாக்கோட பின்புறம், ஓரம், நுனி ஆகிய இடங்களிலேயும் இந்த சுவை முகிழ்ப்புகள் இருக்குது. நாக்கோட மேற்பரப்புல சுவை உணர்வு வாங்கிகள் மெல்லிய செல்களாகப் பதிஞ்சிருக்கு.
நாம கரும்பைக் கடிச்சு, மென்று சாப்பிடும்போது, கரும்புல இருக்குற கடினமான நார் இழைகள், நாக்கின் மேற்பரப்புல இருக்குற எபித்தீலியப் படலத்தையும், சுவை முகிழ்ப்புகளின் பாதுகாப்புச் செல்கள் சிலதையும் சிதைத்துவிடும். நார் இழைகள்ல இருக்குற கரும்புச்சாறு, சுவைத்துளைக்கு சென்று சுவை அரும்பு உணர்வு செல்களைத் தூண்ட, நாம் இனிப்புச் சுவையை உணர்வோம். அதுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கும்போது, தண்ணீர்ல இருக்குற கனிம உப்புப் பொருள்கள், சிதைஞ்ச செல்களின் மீது பட்டவுடன் நாக்கு எரியுது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.