அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் இறுதிமரியாதை செலுத்தினார்

 விஸ்வ ஹிந்துபரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் இறுதிமரியாதை செலுத்தினர்.

அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந்தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக்சிங்கால் உயிர்பிரிந்தது. பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்எஸ்எஸ். தலைமைய கத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய வர்தன் ரத்தோர் மற்றும் பாஜக. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதிமரியாதை செலுத்தினர்.

டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி கூறியுள்ளதாவது:- அசோக்சிங்கால் மறைவு தனக்கு பேரிழப்பு. நாட்டின் வளர்ச்சி்க்காக தன் வாழ்க் கையையே அர்ப்பணித்தவர் . அசோக்சிங்கால் அவர்களின் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதல்களும் எனக்கு எப்போதும் கிடைத்தது அதிர்ஷ்ட வசமானது. அசோக் சிங்கால் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாள ர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...