பசுமைச் சுதந்திரம்

அதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள்களால் காற்றில் மிதக்கவிடப்படும் Carbon dioxide சுற்றம் சூழலை மாசுபடுத்தாத

வகையில் மீண்டும் எரிபொருளாக மாற்றம் பெறும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகளான F. Jeffrey என்பவரும் William L. Kubic சர் என்பவரும் ஆதார பூர்வமாக நிருபித்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் Carbon dioxide Pottassium என்ற கரைசலுக்குள் ஊத்தப்படும்போது, Carbon dioxide உறிஞ்சப்பட்டு வேறு சில இரசாயனமாற்றங்களின்பின், எரிவாயுவாக மீண்டும் வடிவெடுப்பதைக் காணத்தவறவில்லை. அப்பாடா, ஒருவழியாக இன்றைய சமுதாயம் அனுபவித்த சுகங்களை, இளைய சந்ததியினரும் அனுபவிக்க இவ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் வாய்ப்பளிக்குமெனமூச்சு விடலாம்.

தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் எண்ணெய்வளத்தை ஈடுசெய்ய, ஏராளமான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் சோளம்,கரும்பு, போன்ற தாவரங்களுக்கு பதிலாக எரிவாயுக்களின் மீட்புபணியை ஏற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஆலைகள் உதயமாகுமென நம்பலாம்.

இவ்வாலைகள் குறைந்தசெலவில் இயங்க வேண்டுமாயின், அணுசக்திக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையாக மாறாமல் இருந்தால், புதிய கண்டுபிடிப்பு நிச்சயம் பசுமைச் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். நல்லவை நடக்க நாமும் காத்திருப்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...