பாஜகவில் இருந்து விலக ‘தாத்தா’ பெயரை ‘சித்தப்பா’ பயன்படுத்தியிருக்க கூடாது‍:

 பாஜகவில் இருந்து விலக 'தாத்தா' பெயரை 'சித்தப்பா' பயன்படுத்தியிருக்க கூடாது‍: கலாம் பேரன் சலீம்

ராமேஸ்வரம்: பாஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு தாத்தா பெயரை சித்தப்பா காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் தெரிவித்தார்.

சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பாஜனதாவில் இருந்து விலகியது குறித்து கலாமின் பேரனும், சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்தவருமான சேக்சலீமிடம் பேசினோம்.

"தாத்தா கலாமின் பெயரில் அவர் வாழ்ந்த டெல்லி இல்லத்தில் அறிவுசார் மையம் அமைக்க மத்திய அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் தாத்தா வசித்து வந்த இல்லம் அமைந்திருக்கும் பகுதி மிக அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட பகுதியாகும். அந்த வீட்டின் இருபுறமும் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளின் வீடுகள் உள்ளது. பின்புறம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லம் உள்ளது.

இவர்களை சந்திக்க முக்கிய வி.ஐ.பி.க்கள் வரும் நிலையில், அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறிவிடும். இது போன்ற காரணங்களால் தாத்தா வசித்த வீட்டில் அறிவுசார் மையம் அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவேதான் அவரது உடமைகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை ராமேஸ்வரத்தில் அமைய உள்ள நினைவகத்தில் வைக்க உள்ளோம். இதனிடையே டெல்லியில் நினைவு இல்லம் அமைக்க மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதுதான் துவங்கியுள்ளது. அது முடிந்தபின் தாத்தா பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்.

இந்நிலையில் தாத்தா பெயரில் அறிவுசார் மையம் அமைக்காததை கண்டித்து எனது சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பி.ஜே.பி.யில் இருந்து விலகியிருப்பது ஏற்க கூடியதாக இல்லை. எனது தாத்தா கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கட்சியில் இருந்து விலகுவதற்கு அவரது பெயரை காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது. ‪#‎யாரோ‬ #‎சிலரின்‬ ‪#‎தவறான‬ ‪#‎தூண்டுதலில்‬ இப்படி செய்திருக்கிறார்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...