பாஜகவில் இருந்து விலக ‘தாத்தா’ பெயரை ‘சித்தப்பா’ பயன்படுத்தியிருக்க கூடாது‍:

 பாஜகவில் இருந்து விலக 'தாத்தா' பெயரை 'சித்தப்பா' பயன்படுத்தியிருக்க கூடாது‍: கலாம் பேரன் சலீம்

ராமேஸ்வரம்: பாஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு தாத்தா பெயரை சித்தப்பா காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் தெரிவித்தார்.

சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பாஜனதாவில் இருந்து விலகியது குறித்து கலாமின் பேரனும், சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்தவருமான சேக்சலீமிடம் பேசினோம்.

"தாத்தா கலாமின் பெயரில் அவர் வாழ்ந்த டெல்லி இல்லத்தில் அறிவுசார் மையம் அமைக்க மத்திய அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் தாத்தா வசித்து வந்த இல்லம் அமைந்திருக்கும் பகுதி மிக அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட பகுதியாகும். அந்த வீட்டின் இருபுறமும் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளின் வீடுகள் உள்ளது. பின்புறம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லம் உள்ளது.

இவர்களை சந்திக்க முக்கிய வி.ஐ.பி.க்கள் வரும் நிலையில், அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறிவிடும். இது போன்ற காரணங்களால் தாத்தா வசித்த வீட்டில் அறிவுசார் மையம் அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவேதான் அவரது உடமைகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை ராமேஸ்வரத்தில் அமைய உள்ள நினைவகத்தில் வைக்க உள்ளோம். இதனிடையே டெல்லியில் நினைவு இல்லம் அமைக்க மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதுதான் துவங்கியுள்ளது. அது முடிந்தபின் தாத்தா பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்.

இந்நிலையில் தாத்தா பெயரில் அறிவுசார் மையம் அமைக்காததை கண்டித்து எனது சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பி.ஜே.பி.யில் இருந்து விலகியிருப்பது ஏற்க கூடியதாக இல்லை. எனது தாத்தா கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கட்சியில் இருந்து விலகுவதற்கு அவரது பெயரை காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது. ‪#‎யாரோ‬ #‎சிலரின்‬ ‪#‎தவறான‬ ‪#‎தூண்டுதலில்‬ இப்படி செய்திருக்கிறார்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...