25|11|2015 அன்று பெங்களூருவில் மௌண்ட் கார்மெல் எனும் பிரபல மகளிர் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராஹூல் காந்தி தனது மேதா விலாசத்தால் அவர்களைக் கவர விரும்பினார். ஆனால் நடந்ததென்னவோ நேர்மாறான விஷயம்.
மத்திய அரசைச் சாடிப் பேசிய ராஹூல், “நாட்டை சுத்தமாக்குவது எல்லாம் ஒரு திட்டமா? ‘ஸ்வச் பாரத்’ திட்டம் பலன் தருமா?” எனக் கேட்டார். அரங்கிலிருந்த அநேகம் பேர் “ஆம், ஆம்” எனப் பதில் தந்தனர். இதை எதிர்பார்க்காத ராஹூல், “இல்லை என்பது தானே உங்கள் பதில்?” என மறுபடியும் கேட்டார். ஆனால் “ஆம்” என்பது தான் தங்களது பதில் என மாணவியர்கள் உறுதிப்படுத்தினர். திடுக்கிட்ட ராஹூல் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, “ஸ்வச் பாரத் திட்டம் வேலை செய்கிறதா?” என மூன்றாவது முறையாகக் கேட்கவும், ஒட்டு மொத்த அரங்கமும் அதிரும் வகையில் “ஆம்” என்ற ஒருமித்த குரல் ஓங்கி ஒலித்தது.
#கத்துகிட்ட_மொத்த_வித்தையையும்_இறக்கினார்
“சரி அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வேலை செய்யுமா?” எனக் கேட்டார் ராஹூல். அதற்கும் “ஆம்” என்ற பதிலே அனைவரிடம் இருந்தும் வர, “உங்களுக்குத் தான் அப்படித் தெரிகிறது எனக்குத் தெரியவில்லை” எனச் சொல்லி அசடு வழிந்தார் ராஹூல். கோமாளி வேஷம் போடாமலேயே பலரையும் அவர் சிரிக்க வைத்தார் என்பது தான் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.