இன்று அகில இந்திய வானொலியில் தனது மன் கிபாத் நிகழ்ச்சியில் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய மோடி, பெண்கள் பல்வேறுதுறைகளில் புதிய உயரங்களை எட்டுவதாகவும் கூறினார். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள பெண்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி இன்று பாராட்டினார். மார்ச் 8 ஆம் தேதி நாடுமுழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும். திருமணத்திற்கான பொதுவானவயதை நிர்ணயிப்பதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைவழங்க நாடு முயற்சித்து வருவதாக மோடி கூறினார்.
‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் வெற்றியால் நாட்டில் பாலினவிகிதம் மாறியுள்ளது. பள்ளிசெல்லும் பெண்களின் எண்ணிக்கையும் மேம்பட்டுள்ளது. ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தின்கீழ் பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுதலை பெற்றதாகவும் கூறினார். முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, நாட்டில் முத்தலாக் முறை 80 சதவீதம் குறைந்துள்ளது.
பெண்களே இப்போது மாற்றத்தை முன்னெடுத்து செல்வதால் தான் இந்தமாற்றங்கள் எல்லாம் நிகழ்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |