வெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி சென்னை வருகை

 தமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ம்தேதி தொடங்கியது வங்க கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்லமழை பெய்தது.

குறிப்பாக கடலூர்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 29 ம் தேதி தமிழக வெள்ள சேதபகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.

முதலில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி பகலில் சென்னை வருகிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் கடலூர்செல்லும் அவர், அங்கு வெள்ளசேதங்களை பார்வையிடுகிறார்.

பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கலில் வெள்ள பாதிப்பு களையும் ஹெலிகாப்டர் மூலமே பார்வையிடுகிறார், அவருடன் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் செல்வார்கள் என கூறப்படுகிறது.

இதையடுத்து அன்று மாலையே பிரதமர்மோடி சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...