4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியது

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருள்ளூர் மாவட்டத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.  நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பட்டு, திருவெள்ளைவாயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாளைவனம், இளவெம்பேடு, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், வீராணத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், ஆர்கே பேட்டை, செம்பேடு, பூனிமாங்காடு, கோரமங்கலம், ஆகிய பகுதிகளில் இந்த சேவை 2024 ஜூலை 5 அன்று தொடங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி, தலைமைப் பொது மேலாளர் பாப்பா சுதாகர்ராவ், இந்த சேவைகளைத் தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய 4ஜி சேவை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ.16.25 கோடியாகும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள பாகுபாட்டை நீக்கி ஊரகப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியை இது காட்டுகிறது. இந்தப் பகுதிகளில் 4ஜி சேவைகளின் அறிமுகம், கல்வி, வணிகம், குடிமக்களுக்கு அதிகாரம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தொலைபேசியின் IX.2 திட்டத்திற்கு 2,114 4-ஜி கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4ஜி சேவைகள்  விரைவில் சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும்  உள்ளடக்கியதாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...