காற்று மாசைத் தடுக்க ‘எலக்ட்ரிக் பஸ்

தலை நகர் டில்லியில், கடுமையான வாகன போக்கு வரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக் கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் மோடி பரிசாக அளிக்கவுள்ளார்.

இது பற்றி, மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி நேற்று கூறியதாவது:டில்லியில் கடும் வாகன போக்கு வரத்தால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உதவும்வகையில், பார்லிமென்ட் எம்.பி.,க்களுக்கு, இரண்டு எலக்ட்ரிக்பஸ்களை, வரும், 21ல் பரிசளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.


இந்த பஸ்களில், லித்தியம் – அயன்பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த பயன் படுத்தும் அதிநவீன பேட்டரிகள் இவை; இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கபட்டவை.


பிரதமர் மோடியின், 'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டத்தின்கீழ், இந்தபேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தபேட்டரிகளுக்கு, காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. இதற்குமுன், இந்த வகை பேட்டரிகள், 55 லட்சம் ரூபாய் விலையில் இறக்குமதி செய்யபட்டு வந்தன. முதற்கட்டமாக, டில்லி சாலைகளில், 15 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதன் வெற்றியை பொறுத்து, பிற நகரங்களுக்கும், இத்திட்டத்தை விரிவுபடுத்துவோம்.நாடுமுழுவதும், டீசலில் இயக்கப்பட்டு வரும், 1.5 லட்சம் பஸ்களை, பேட்டரியில் இயங்குப வையாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது. என்று நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...