எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பாக்ஸ்கான்; மோடியுடன் சந்திப்பு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம்முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் உற்பத்தியில் பல சிக்கல்கள் இருப்பதுமட்டும் அல்லாமல் போதிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால் வர்த்தகப் பாதிப்பு சற்றுஅதிகமாகவே இருக்கிறது.

இந்த இடைவேளையை உணர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக்கார் தயாரிப்பில் இறங்குவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் தொழிற் சாலையை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்காக இன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி வியாழன் அன்று பாக்ஸ்கான் தலைவர் யங் லியு-வை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்தார் மோடி தெரிவித்தார்.

“Foxconn இன் தலைவரான திரு யங்லியுவை சந்திப்பதில் மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்துவதற்கான அவர்களின் திட்டங்களை நான் வரவேற்கிறேன்” என்று மோடி தனது டிவிட்டரிலும் கூறினார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திட்டம் மூலம் இந்தியாவின் நெட்ஜீரோ இலக்கை அடைய முடியும் என பிரதமர் நரேந்திரமோடி உடனான சந்திப்பில் பாக்ஸ்கான் தலைவர் யங்லியு கூறியுள்ளார்.

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்க பல தொழிற் சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக்கார் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல்பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தைவான் நாட்டின் Kaohsiung பகுதியில் துவங்கியது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து இந்தியாவிலும் எலக்ட்ரி வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாக பேட்டரி தொழிற் சாலையைத் துவங்கியது நம்பிக்கை அளிக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...