ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற படைப்பாளிகள்-
பாரதிராஜாவை சினிமாவில் படைப்பாளி என்கிறோம். அவர் சார்ந்த தொழிலில் அவர் படைப்பாளி அது மாதிரி.அனைத்து தொழில்களிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழில்களுக்கு தகுந்த மாதிரி பெயர்கள் மாறி விடுகின்றது.அது மாதிரி தான் தொழில்துறையில் புதிதாக நுழைந்து வித்தியாசமான அணுகுமுறையில் வெற்றி பெரும் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று சொல்லப்ப டுகிறது.இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் படைப்பாளிகளே.
.
இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்-அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான்
1)பிலிப்கார்ட்-சச்சின் பன்சால்,2)ஒலாகேப்ஸ்-பாவிஸ் அகர்வால் 3)ஓயோ ரூம்ஸ்,-ரித்திஸ் அல்கர்வால், 4)ஸ்நாப்டீல்-குணால்பால் 5)குய்க்பாட்-,ரவி குருராஜ்,6)ஜோமாட்டோ-தீபிந்தர் கோயல்,7)இன் மொபி- நவீன் திவாரி, 8)பிராக்டோ-சசாங், 9)புக் மைஷோ- ஆசிஷ்ஹெம்ரஜினி, 10)ப்ரஷ் டெஸ்க்-கிரிஸ் மாத்ருபூதம்
இவையெல்லாம் இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப உதவி யுடன் சுற்றுலா, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், உணவு, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல வெற்றிகரமாக சேவையாற்றி வரும் படைப்பாளிகளாகும்..
ஆரம்பத்தில் ஸ்டார்ட்-அப் என்பது ஒரு ஐடியாவாக இருக்கும். அதாவது 16 வயதினிலே படத்திற்கு பாரதிராஜா மயிலை பற்றி தான் முதலில் யோசித்திருப்பார்.அதற்கு பிறகு பாக்யராஜ் வந்து எங்க ஊரில் சப்பாணி என்று ஒருத்தரை பார்த்திருக்கிறேன் என்பார்.உடனே பாரதிராஜா மயிலுக்கு ஜோடி சப்பாணி ஒகே கதை ரெடிஎன்று சொல்லிவிடுவார்.அடுத்து மணிவண்ணன் வந்து பரட்டைன்னு ஒருத்தரை இடையில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பார்.
ஆக ஒரு படத்திற்கு மூல கதையை வைத்து கொண்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் துணையோடு திரைக்கதை அமைத்து எஸ்ஏ ராஜ்கண்ணு மூலம் 16 வயதினிலே படத்தை கொடுத்து வெற்றி பெற்ற பாரதிராஜா ஒரு படைப்பாளி என்றால் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் புதிய ஐடியாவுடன் இருக்கும் ஒருவர் நண்பர்கள் உதவியுடன் மக்களின் தேவைகளை அறிந்து வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுத்து கொஞ்சம் மூலதனத்தை வைத்து கொண்டு ஜெயிப்பது தான் ஸ்டார்ட் அப்நிறுவனமாகும்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.