பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் பதவிகாலம் சனிக்கிழயுமைடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் பதவிக்கு வருகிற 25–ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிக்கையில் ‘பா.ஜனதாவின் தலைவர்பதவிக்கு போட்டியிடு பவர்களிடம் இருந்து வருகிற 24–ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம். இதன்மீதான பரிசீலனை மற்றும் விண்ணப்பங்கள் ஏற்பு அல்லது திரும்பப்பெறுதல் பகல் 1 மணி முதல் 1.30 மணி இடையே நடைபெறும். தேவைப்படும்பட்சத்தில் 25–ந்தேதி காலை 10 முதல் 2 மணி வரை தேர்தல் நடைபெறும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஒருமனதாக அமித்ஷா மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.