இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல் -வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து

‘இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்,’ என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இன்று 2வது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை காண, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றது.

அவர்கள், தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். வாக்காளர்கள் மத்தியில் நிலவும் உற்சாகம், வேட்பாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தனர்.

பார்வையாளராக வந்திருந்த அமெரிக்க குழு துணை தலைவர் ஜோர்ஹன் ஆண்ட்ரூஸ் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நேரில் காணும் போது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகளை காணவும் ஆர்வம் மிகுதியாக உள்ளது.
இதை காணும் போது இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.கொரியா நாட்டு பிரதிநிதி சாங் வூ கூறுகையில், ”இளஞ்சிவப்பு (பிங்க் நிறம்) ஓட்டுச்சாவடியில் செயல்படும் நிர்வாகிகள் அனைவரும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி அளித்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.

காஷ்மீருக்கு நாங்கள் வந்தது இது தான் முதல் முறை. வெளிநாட்டு பிரதிநிதியாக இங்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இடங்கள் மிகுந்த அழகாகவும், மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் உள்ளனர்,” என்றார்.

சிங்கப்பூர் பிரதிநிதி செங் வீ வீ ஆலிஸ் கூறுகையில், ”நான் இங்கு ஓட்டு போடுபவர்களை பார்த்தேன். சிங்கப்பூரில் இதே மாதிரி நடைமுறையை கொண்டு வர முயற்சிப்போம். இங்குள்ள அரசு கட்டிடங்களை ஓட்டுச்சாவடிகளா பயன்படுத்துவது, அது வாக்காளர்கள் எளிமையாக பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...