பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதால் கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவகல்லூரி கட்டிடம், புற நோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைப்பதற்காகவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வந்துசேரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார்.

பின்னர் பிரதமர்  அங்கிருந்து காரில்புறப்பட்டு 3.30 மணிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு வருகிறார். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கிறார்.

இவ்விழாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகிக்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பி.மோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி எம்.பி. பி.நாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

திறப்புவிழா முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் மாலை 4.45 மணிக்கு கொடிசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பண்டாரு தத்தாத்ரேயா, அகில இந்திய பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்  உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து மாலை 6 மணிக்கு காரில்புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் 6.30 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில், 35 போலீஸ் சூப்பிரண்டுகள், 50 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 6 ஆயிரம்பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் மற்றும் பொதுக் கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கோவை வந்து உள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் தனிப்பிரிவு (எஸ்.பி.ஜி.) ஐ.ஜி. யஷ்வந்த்குமார் ஜெத்வா தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம், கொடிசியா மைதானம், பிரதமர் பயணம் செய்யும் சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

கொடிசியா மைதானத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர்.

பிரதமர் பயணம் செய்வதற்காக குண்டுதுளைக்காத 3 கார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுக் கூட்ட மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார விளக்குகள் உள்பட அனைத்து பொருட்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் வருகையையொட்டி, கோவை அவினாசி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.