மத சகிப்பின்மை தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் பொய்பிரசாரம்

மத சகிப்பின்மை விவகாரம் என்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமை யிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் பொய்பிரசாரம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சம்பல் பூரில் புதன் கிழமை நடந்த பாஜக கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மத சகிப்பின்மை என்கிற எதிர்க் கட்சிகளின் பொய்யான பிரசாரத்தை முறியடிக்க கட்சித்தொண்டர்கள் பாடுபட வேண்டும். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சிகள் அவரது நிர்வாகத்தை குறைகூறி வந்தனர். எனினும் அந்த மாநிலத்தில் முஸ்லிம் இனத்த வர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.

நாட்டில் மதச்சகிப்பின்மை நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பொய் பிரசாரத்துக்கு கட்சியினர் தக்க பதிலடி தர வேண்டும். நீர்வளமும் கனிம வளமும் சரிவர பயன்படுத்தப் பட்டால், ஒடிஸா நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவெடுக்கும். இதுதொடர்பாக நான் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து விவாதிக்க விருக்கிறேன். நீர்வள ஆதாரங்களை சரியான முறையில் பயன் படுத்தி ஒடிஸாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்ல விரிவான திட்டத்தை அவரிடம் ஆலோசிக்கவிருக்கிறேன். அதேபோல, ஹீராகுட் அணையை பார்வையிட்டு, மகா நதியில் கலக்கும் மாசு குறித்தும் முதல்வரிடம் விவாதிக்க விருக்கிறேன் என்று உமா பாரதி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...