பிரதமர் மோடியை ரஜினி சந்திக்கிறார்

நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 

முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரஜினி, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினர் டெல்லி சென்றிருக் கின்றார்கள். ஒரு மாதம் டெல்லியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட் டுள்ளனர்.

ரஜினி காந்த்தும் ஒரு மாதம் டெல்லியில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கும் விழா வருகிற 28–ந் தேதி மற்றும் ஏப்ரல் 12 தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துவருகிறது.

கலைத்துறையில் ரஜினியின் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது ரஜினி டெல்லியில் இருப்பதால் இந்தவிழாவில் பத்ம விபூஷன் விருதை ரஜினி நேரில் சென்று பெற இருக்கிறார்.

இந்தநிலையில் ரஜினி டெல்லியில் தங்கி இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம்கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சல்மூலம் இருவர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பத்ம விருது வழங்கும் விழா நடைபெறுவதற்கு முன்பு சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கும், அத்வானிக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அத்வானி அலுவலக செயல் அதிகாரிகள் மூலம் இந்தகோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது.

இதற்கிடையே முதல்கட்டமாக வருகிற 28–ந்தேதி நடைபெறும் விருதுவழங்கும் விழாவிலேயே ரஜினிக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறையை, பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றிய தகவல் ரஜினி காந்த்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் பிரதமரையும், அத்வானியையும் ரஜினிகாந்த் சந்திக்க நேரம்கேட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இரு தலைவர்களையும் சந்தித்தபிறகு ரஜினி தமிழக தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம் என்ற எதிர் பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...