“அம்மா புராணி” செ.கு.தமிழரசனுக்கு 10 கேள்விகள்!

1. பிரதமர் மோடியை விசிட்டிங் பிரதமர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என்கிறீரே…! எங்களால் பிரதமரைப் பார்க்க இயலவில்லை எனக் குறைபட்டுக் கொண்ட (உங்களைத் தவிர வேறு) எவரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

 

2. “விசிட்டிங் பிரதமர்” கோவை வந்த போது 48  மணி நேரத்தில் சந்தித்தோம். ஆனால் தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு நாலரை ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம் என  திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறினார்களே, இது தான் "Reachable" முதல்வரின் லட்சணமா? உங்கள் பதில் என்ன?

 

3. பாராளுமன்றத்தில் அதிமுக ‘எம்.பி’க்கள் பார்த்துப் பார்த்துப் படிப்பதை பியூஷ் கோயல் குறை சொல்லவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அம்மா புராணம் பாடுவதாகச் சொன்னார் என்பதை உங்களால் ஏன் திருப்பிச் சொல்ல முடியவில்லை?

 

4. மெத்தப்படித்தப் பலர் அதிமுகவில் இருக்க ஊடக விவாதத்திற்கு சொந்தக் கட்சிக்குப் பதிலாக அதிமுக சார்பாக உங்களைப் போன்ற உதிரிக் கட்சிகளை மட்டுமே அனுப்பும் மர்மமென்ன?

 

5. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கட்சியைத் துவக்கிவிட்டுத் தனக்கு ஒரு எம்.எல்.ஏ பதவிக்காக அதிமுகவின் ஊதுகுழலாக மாறியது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?

 

6. சாதாரணத் தொண்டன் நினைத்தாலும் ஜெ’வைச் சந்திக்க முடியுமென நீங்கள் சொல்வது உண்மையானால், கடந்த ஆண்டுகளில் அப்படிச் சந்தித்த அமைச்சர்கள் / சட்ட மன்ற உறுப்பினர்கள் / தொண்டர்களில் ஒரு சிலரையாவது குறிப்பிட முடியுமா?

 

7. “ஜெ” ஆயிரக் கணக்கானவர்களைச் சந்திக்கிறார் என நீங்கள் கூறுவது, அவர் காரில் பயணிக்கும் போது உங்களால் அழைத்து வரப்பட்டவர்கள் சாலை ஓரம் அணிவகுத்து நிற்பார்களே… அவர்களைத் தானே சொல்கிறீர்கள்?

 

8. தொண்டர் குறைகளை உடனேக் கேட்டுக் களைவதாக நீங்கள் சொல்லும் “ஜெ” வீட்டு முன், “குறைகளைக் கேட்கவில்லை” எனத் தொண்டர்கள்  தீக்குளிக்க முயற்சித்தச் சம்பவங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

9. காரில் செல்லும் போது கூடச் சாதாரணத் தொண்டர்களைச் சந்திக்கும் “ஜெ”, விருப்ப மனு கொடுத்த அனைவரையும் சந்திக்காதது ஏன்?

 

10. விருப்ப மனு நேர்காணலை மற்றக் கட்சிகள் நேரலையாக ஒளிபரப்பும் போது, நீங்கள் விருப்பப் பட்ட சிலருக்கு மட்டும் நேர் காணல் நடத்தி அந்தப் புகைப்படத்தைக் கூட (நமது எம்.ஜி.ஆர் உட்பட) எந்தப் பத்திரிகையிலும் வெளியிடவில்லையே, ஏன்? அம்மா அதில் இல்லாததாலா?

 

என்றும் தாயகப் பணியில்

எஸ்.ஆர்.சேகர்

மாநிலப் பொருளாளர்
செய்தித் தொடர்பாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...