1. நீ, ""நான் ஜபம் செய்யும்போது, என் மனம் நிலையில்லாமல் அலைபாய்கிறது'' என்று சொல்கிறாய். இது உனக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவம் இல்லை. இந்தப் பிரச்னை பலருக்கும் இருப்பதுதான். இருந்தாலும் நீ, இறைவன் நாமத்தை ஜபம் செய்வதை நிறுத்தாதே. "இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்' என்பதை, நீ உறுதியாகத் தெரிந்துகொள்.
2. நீ சரியாக ஜபம் செய்தாலும் சரி அல்லது, அரைகுறை யாக ஜபம் செய்தாலும் சரி எப்படியிருந்தாலும் இறைவன் நாமத்தை விடாமல் ஜபம் செய்து வா. அதற்கு என்று ஒரு தனிசக்தி இருக்கிறது. உதாரணமாக ஓர் இனிப்பு பண்டம் இருக்கிறது என்று வைத்துக்கொள்; அதை நீ எந்தப் பக்கம் பிடித்து கடித்துச் சாப்பட்டாலும், அது இனிப்பாகத்தான் இருக்கும்.
3. நாம் பார்க்கும் அனைத்தும் ஒருநாள் இல்லாவிட்டால், ஒரு நாள் மறைந்துவிடும். இறைவன் நாமம் மட்டுமே நிலைத்து நிற்கும். மேலும், யார் இறைவனை நினைக்கிறார்களோ, யார் இறைவன் நாமத்தை ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு எல்லாமும் சரியாகத்தான் இருக்கும். இறைவன் நாமம், இம்மையிலும் மறுமையிலும் என்றென்றும் சத்தியமானது
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.