அம்பேத்கரின் மரபுகளை கடந்தகாலங்களில் குறைத்து மதிப்பிட்டதற்காக காங்கிரஸ் வருந்த வேண்டும்

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டு மென்றால் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சட்டமேதையும், இந்திய அரசியல் சாசன சிற்பியுமான அம்பேத்கரின் பிறந்ததினம் நேற்று நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அம்பேத்கர் பிறந்த இடமான மத்தியபிரதேச மாநிலம் மோவ் நகரில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனிவிமானத்தில் இந்தூர் வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மோவ்நகருக்கு சென்றார். இதன் மூலம் அம்பேத்கர் பிறந்த ஊருக்கு சென்ற முதல் இந்தியபிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார்.

அங்கு அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள அம்பேத்கர் நினை வகத்தை  சுற்றிப்பார்த்தார்.அதைத்தொடர்ந்து, மோவ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, கிராமசுயாட்சி பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கிராம சுயாட்சி என்ற காந்தி யடிகளின் கனவு இன்னும் முழுவடிவம் பெறவில்லை. நாடு விடுதலைபெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும், அனைவரும் விரும்பிய இந்தமாற்றம் இன்னும் நிறைவேறவில்லை.

நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் ஏராளமான கிராமங்களில் மின்சாரவசதி எட்டவில்லை. இந்தபகுதிகளை சேர்ந்த மக்கள் 21-ம் நூற்றாண்டிலும், 18 மற்றும் 19-வது நூற்றாண்டு வாழ்க்கையையே இன்னும் வாழ்ந்துவருகின்றனர்.


வெறும் 5 அல்லது 50 நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சியால் மட்டும் நாட்டில் வளர்ச்சி நிகழ்ந்துவிடாது. மாறாக நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கிராமங்களின் பொருளாதாரம் அடிமட்டளவில் வலுப்பெறவேண்டும். எனவே கிராமங்களில் மாற்றத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.

சிலர் (காங்கிரஸ்) கடந்த 60 ஆண்டுகளாக தங்களை ஏழைகளின் ரட்சகர் என சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் இந்த கால கட்டத்தில் அவர்கள் ஏழைகளுக்காக என்ன செய்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால், அதிர்ச்சியேமிஞ்சும்.

அம்பேத்கருடன் தொடர்புடைய 5 இடங்களை முந்தைய காங்கிரஸ் அரசு மேம்படுத்த வில்லை. ஆனால் தற்போதைய அரசு அம்பேத்கரின் தொலை நோக்கு பார்வை சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. டெல்லியில் அம்பேத்கருக்கு நினைவகம் கட்ட எங்கள் அரசு முடிவுசெய்துள்ளது. இதை நீங்கள் (காங்கிரஸ்) கடந்த 60 ஆண்டுகளில் ஏன் செய்யவில்லை? அம்பேத்கரின் மரபுகளை கடந்தகாலங்களில் குறைத்து மதிப்பிட்டதற்காக காங்கிரஸ் வருந்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...