தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்றுவோம்

தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்த மட்டும் ரூ.16 ஆயிரம்கோடி செலவிடப்படுகிறது. இதில் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில்

எல் அன்ட்டி இறக்குமதி முனையம், ரூ.760 கோடியில் வடக்கு சரக்குதளம் விரிவாக்கம், ரூ.80 கோடியில் உணவு தானியங்களுக்கான தனிதளம், ரூ.1,200 கோடியில் கூடுதல் சரக்குபெட்டக முனையம், ரூ.250 கோடியில் நிலக்கரி தளத்தை மேம்படுத்துதல் ஆகியபணிகள் செய்யப்பட உள்ளன.

பட்ஜெட்டில் விவசாயம், நீர்நிலை மேம்பாட்டுக்காக மட்டும் 4 ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரம்கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள 111 ஆறுகள் நீர்வழிப் பாதைகளாக மாற்றப்பட உள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாய், தாமிரபரணி, மணி முத்தாறு, பவானி, பாலாறு, காவிரி உள்ளிட்ட 8 ஆறுகள் நீர்வழிப்பாதைகளாக மாற்றப்பட உள்ளன. இதனால் உள்நாட்டு மீன்பிடி, விவசாயம், குடிநீர், நீர்வழி போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சிபெறும்.

இதேபோல் தமிழகம்- ஆந்திரம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை நீர்வழிப்பாதையாக மாற்றும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

இந்த நீர்வழிப்பாதை திட்டம் ஏற்கெனவே கங்கை நதியில் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நதி நீர் இணைப்பு திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றும்.

கங்கை நதியை கோதாவரியுடனும், கோதாவரியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை காவிரியுடனும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கங்கை, கோதாவரியில் ஏற்படும் வெள்ளம் காவிரிக்கு ஓடிவரும். காவிரிபிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...