ரகுராம் ராஜனின் செயல் பாடுகளால் இந்திய பொருளாதாரம் பாதிக்கிறது

ரிசர்வ்வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல் பாடுகளால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ரகுராம் ராஜனை ரிசர்வ்வங்கி ஆளுநராக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2013-ம் ஆண்டில் நியமித்தது. அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்தவாரம் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிர மணியன் சுவாமி, ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.


 இதைத்தொடர்ந்து, பிரதமர்க்கு தற்போது எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ரகுராம் ராஜனின் செயல்பாடுகளை கவனிக்கும் போது, இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதைவிட, அதை சீர்குலைப்பவராகவே அவர் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

ரிசர்வ் வங்கி ஆளுநர்பதவிக்கு தேசியவாத சிந்தனைகொண்ட நிபுணர்கள் பலர் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இப்படியொரு சூழலில், காங்கிரஸ்கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டு, இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராகச்செயல்படும் ஒருவரை ஏன் அந்தப்பதவியில் நீடிக்கச் செய்ய வேண்டும்? என்று தோன்றுகிறது.


 எனவே, தேசநலனைக் கருத்தில் கொண்டு ரகுராம் ராஜனை பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். நான் ஏன் இந்தப்பரிந்துரையை முன்வைக்கிறேன் என்றால், வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் ரகுராம்ராஜன் எடுத்துள்ள சிலநடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.


 பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறி வட்டி விகிதங்களை ரகுராம்ராஜன் உயர்த்தியது, இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகுந்தபாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க அரசால் வழங்கப்படும் கிரீன்கார்டை (நிரந்தரக் குடியுரிமை அட்டை) வைத்துக்கொண்டு அவர் இந்தியாவில் இருக்கிறார். அந்த அட்டையை செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு ஒரு முறையாவது அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயவிதியை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்துகொண்டு அவர் கடைப்பிடிப்பது ஏன்?


 ஆக, மன ரீதியாக ரகுராம்ராஜன் முழுமையான இந்தியர் அல்ல என்பது தெரிய வருகிறது என்று அந்தக் கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...