ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்துவரும் ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவுகள்  இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக.,வும், மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் கட்சியும்  முன்னிலை வகித்து வருகின்றன. இதையொட்டி ஜெயலலிதாவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு  பேசினேன். தேர்தலில் வெற்றிபெற்றதை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

அதே போல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவரின் அபார  வெற்றிக்கும், இரண்டாவது முறையாக தனது  ஆட்சியை தொடங்குவதற்கும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து   கொள்கிறேன்.அசாம்,மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு எனது நன்றிகளை  தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு சேவைசெயய் இன்னும் கடினமாக உழைப்போம் என இதன் மூலம் உறுதியளிக்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.அதேபோல் ஜெய லலிதாவுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி  தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் ரோசய்யா, ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் ஆகியோர்  வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.