குஜராத் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி

குஜராத்மாநிலத்தில் காங்கிரஸ்வசம் இருந்த தலாலா தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் தலாலா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ. ஜாசு பரத் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்ததையடுத்து அந்ததொகுதிக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்ததொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜாசு பரத்தின் சகோதரர் பகவன்ஜி பரத் போட்டியிட்டார். பாஜக. வேட்பாளராக பார்மர் களமிறங்கினார். இவர் ஏற்கனவே, இதேதொகுதியில் 2002ம் ஆண்டு நடந்ததேர்தலில் வெற்றி பெற்றவர். இவர்கள் இருவருக்குமிடையே நேரடி போட்டி இருந்தது.

இந்நிலையில் தலாலா தொகுதியில் பதிவானவாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜ.க. வேட்பாளர் பார்மர் 63,896 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பரத் 61,456 வாக்குகளும் பெற்றனர். இதனால் பார்மர் 2440 வாக்குகள் வித்தியாசத்தில் பார்மர் வெற்றிபெற்றார்.

இந்தவெற்றியானது 2017ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கான அறிகுறி என அக்கட்சியின் மாநில தலைவர் ரூபானி தெரிவித்தார். பட்டேல் இடஒதுக்கீட்டு போராட்டக் குழுவில் உள்ள சிலர் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்த போதும், பட்டேல் சமூக வாக்காளர்கள் தங்கள்பக்கம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...