அலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழு

அலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழுவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப் படுகிறது.

பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 2 நாட்கள் நடக்கிறது. அடுத்தாண்டு நடைபெறும் மாநில சட்ட சபை தேர்தலை கருத்தில்கொண்டு, முதல் முறையாக அலகாபாத்தில் தேசிய செயற் குழுவை பா.ஜ.க கூட்டுகிறது.

அலகாபாத் கே.பி.கல்லூரி மைதானத்தில் செயற்குழு கூட்டமும், அங்குள்ள அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டமும் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை யாற்றுகிறார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் சுமார் 30 மத்திய மந்திரிகள், 7 மாநில பா.ஜ.க முதல்-மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்காக 500 மீட்டர் நீளம், 380 மீட்டர் அகலத்தில் பிரமாண்டபந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பந்தல் தீ, வெள்ளம் மற்றும் புயல்போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்காத வகையில் உருவாக்கப் படுகிறது. இதற்காக அலுமினிய கம்பிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தகடுகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்தபந்தலில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக 1,600 சதுர மீட்டரில் சிறப்புபகுதியும், தலைவர்கள் அமர்வதற்காக 192 அடியில் மேடையும் அமைக்கப் படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து வரும் செயற்குழு உறுப்பினர்களுக்காக 400 இருக்கைகள் போடப் படுகின்றன. இந்த பந்தலின் தரைத்தளம் முழுவதும் 4 அங்குல பிளைவுட் தகடுகள் பதிக்கப்படுகின்றன.

செயற்குழு நடைபெறும் 2 நாட்களும் பிரதமர் நரேந்திரமோடி அலகாபாத்திலேயே தங்கியிருப்பதால், பந்தலுக்கு அருகே தற்காலிக பிரதமர் அலுவலகம் ஒன்றும் அமைக்கப் படுகிறது. அத்துடன் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கான உணவுக்கூடம் மற்றும் சமைய லறைக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது.

பந்தல் மற்றும் பிரதமர் அலுவலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் வாரணாசியை சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் பிரகாஷ் சந்த் யாதவ் மேற்பார்வையில் நடக்கிறது. செயற்குழு கூட்டம் நடைபெறும் கல்லூரி மைதான ஏற்பாடுகளை மாநில பா.ஜனதா துணைத்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசுத்தோஷ் தாண்டனும், பொதுக்கூட்டம் நடைபெறும் அணிவகுப்பு மைதான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் சுதந்திரதியோ சிங்கும் கவனித்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...