4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாய ஹெல்மெட்

சாலை விபத்துக்களில் தினசரி 34 குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

கடந்த 2015ம் வருடத்தில், 17 வயதுக்குகீழ்பட்ட சுமார் 12, 500 குழந்தைகள் சாலைவிபத்துகளில் பலியாகியுள்ளனர். இவற்றில் பெரும்பா லானவை, இருசக்கர வாகனங்களில்தான் அதிக குழந்தைகள் பலியாகியுள்ளது, மத்திய அரசு எடுத்த குறிப்புகளில் தெரியவந்துள்ளது. இதனை யடுத்து குழந்தைகளும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, மோட்டார் வாகனசட்டம் 1988 ல் திருத்தம் கொண்டுவர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு அனைத்து அமைச்ச கங்களுக்கும் கருத்து கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் 18 ம் தேதி துவங்கும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

நாடு முழுவதிலும் சாலை விபத்துகளில் குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பார்லிமென்டில் இந்தசட்டம் இயற்றப்பட்டதும், குழந்தைகளை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துவரும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...