நேரடி மானிய திட்டத்தை கண்காணிக்க இணையதளம்

காஸ் மானியம் தொடங்கி, அரசின் அனைத்து நலத் திட்ட பண பலன்கள் அனைத்தும் நேரடி மானியமாக வங்கிக் கணக்கில் வழங்கப்ட்டு வருகின்றன. பலன் உரியவர்களுக்கு நேரடியாக சென்றுசேரவும், மோசடிகளை தவிர்த்து நடைமுறைகளை விரைவாக்கவும் இது உதவுகிறது.


 அனைத்து திட்டங்களுக்கும் நேரடிமானியம் மூலம் பலன்கள் வழங்க பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் வலியுறுத்தி யிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் , பீகார், உத்தரபிரதேசம் உட்பட பலமாநிலங்களில் நேரடிமானிய திட்டபிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு யூனியன் பிரதேசங்கள், 70 மத்திய அரசு துறைகளிலும் இந்தபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம், சமையல் காஸ், மண்ணெண்ணெய், உணவுதானிய மானியங்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது. நலத்திட்டம், முதியோர் பென்ஷன், கல்வி உதவித் தொகைகள் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.  

மேலும் மத்திய அரசின் கனவுதிட்டங்களில் ஒன்றாக நேரடி மானிய திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பலன்பெறுபவர் தனது ரேஷன் கார்டு, மண்ணெண்ணெய் அல்லது காஸ்மானியம், நலத்திட்டமானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளம் ஆகஸ்ட் 1ம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைகள் உட்பட பலவற்றையும் கண்காணிக்கவும்   நிர்வகிக்கவும் இந்தஇணையதளம் உதவும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...