லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட இன்று மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி. பெண்களை தொழில்முனைவோராக உயர்த்தி, அவர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டமான, ‘லட்சாதிபதி சகோதரி’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10,000 உதவித் தொகையும், அரசு உதவித் தொகையாக ரூ 12,500 ,வங்கிக் கடனாக ரூ12,500 ம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, மகளிர் துவங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மஹாராஷ்டிராவில் ஜல்கோவான் என்ற இடத்திலும் ராஜஸ்தானின் ஜெயப்பூரில் நடைபெற உள்ள விழாவிலும் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு உதவிகளை வழங்குகிறார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |