திருநங்கைகள் நலன்

திருநங்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனைப் பாதுகாக்க ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019’ மற்றும் அதன் விதிகளை அரசு இயற்றியது. திருநங்கைகள் நலன் சார்ந்த மற்றும் களங்கம் கற்பிக்காத நலத்திட்டங்களை உருவாக்குதல், சமூகத்தில் அவர்களின் கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய இடத்தை உறுதி செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டாமை, சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பல நலத்திட்டங்களை வழங்குதல் ஆகியவற்றை இச்சட்டம் மற்றும் விதிகள் கட்டாயமாக்குகின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ‘பிறர்’ என்ற பிரிவில் ‘திருநங்கைகள்’, மொத்த மக்கள் தொகை 4,87,803 ஆகும். ‘பிறர்’ என்ற வகையின் கீழ் பாலினத்தைப் பதிவு செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் அடங்குவர்.

திருநங்கைகளை சமுதாயத்தில் இணைத்துக் கொள்வதற்காக அவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பின்வருமாறு:

திருநங்கைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவது குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவும், சமத்துவம் மற்றும் முழு பங்கேற்பை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்யவும், அரசின் அனைத்து துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், ஒருங்கிணைக்கவும், திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டது. இக்குழு 16.11.2023 நாளிட்ட அறிவிக்கையின் மூலம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நலனுக்கான விரிவான மறுவாழ்வுக்கான மத்திய அரசின் திட்டம் என்ற துணைக்கூறுடன், வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான விளிம்புநிலை தனிநபருக்கான ஆதரவு  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருநங்கைகளின் நலனுக்காக திறன் மேம்பாடு, கூட்டு மருத்துவ ஆரோக்கியம், கண்ணியமான இல்லம் என்ற பெயரில் பாதுகாப்பான தங்குமிடங்கள், திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கான சான்றிதழ்கள் வழங்குதல், திருநங்கைகள் பாதுகாப்பு மையங்கள் அமைத்தல் மற்றும் இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக தேசிய சுகாதார ஆணையத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தில்லி, ஒடிசா, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் (2) மற்றும் மகாராஷ்டிரா (3) ஆகிய 9 மாநிலங்களில் ஆதரவற்ற திருநங்கைகளுக்காக, 12 கண்ணியமான இல்லங்கள் (கரிமா கிரேஹ்கள்) மற்றும் தங்குமிடங்களை இத்துறை அமைத்துள்ளது.

தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு, திருநங்கைகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதற்காக, திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். இதில் விண்ணப்பதாரர், திருநங்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழை வழங்கப்பட்ட பிறகு எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமின்றி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இந்த இணையதளத்திற்கு 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை 21330 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகர், அந்தமான் & நிக்கோபார், சிக்கிம், பஞ்சாப், மிசோரம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் 11 திருநங்கைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான், மிசோரம், சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில், 19 திருநங்கைகள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பதற்கும், திருநங்கைகளுக்கு பாகுபாடு காட்டாததற்கும், பாலினம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும் இடங்களில், திருநங்கைகளிடம் பாகுபாடு காட்டாமல் ஆண் மற்றும் பெண் விருப்பங்களுடன் திருநங்கை என்ற விருப்பத்தை வழங்குவதற்கும். அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு சம வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திருநங்கைகளுக்கான சம வாய்ப்புகள் கொள்கையை இத்துறை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...