சுதந்திரதினத்தை பாரதவிழாவாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு பரிசிலனை

சுதந்திரதினத்தை பாரதவிழாவாக கொண்டாடுவதற்கு மத்தியில் ஆளும்  அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரதினம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை பாரதவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதையொட்டி, தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரத விழா, ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கப்படும். ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடையும். இதையொட்டி, இந்தியா கேட் பகுதி விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் மூலம், நாட்டு மக்களிடையே தேசபக்தி ஊக்குவிக்கப்படும். இதுதவிர, ராஜபாதை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அந்த அரங்குகளில், பல்வேறு மாநிலங்களும் தங்களது சமையல், கைவினை தயாரிப்புப் பொருட்கள் பார்வைக்கு வைக்கவுள்ளன.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இந்தியா கேட் பகுதியில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் போன்ற ஹிந்தி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், பாரதவிழா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உள்ளுர் கலையுல கத்தினர் பங்கேற்பார்கள். பாதுகாப்புப் படைவீரர்கள் சார்பாகவும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இந்திய சுதந்திரதினத்தை இதுபோன்ற விழாவாக கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சுற்றுலா அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...