பஞ்சாபில் கலவரத்தைத் தூண்டிவிட பாகிஸ்தான் முயற்சி

கடந்த 25 ஆண்டுகளுக்குமுன்னர், காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியது போல், சீக்கியர்களை வெளியேற்றுவதற்கு பஞ்சாபில் கலவரத்தைத்தூண்டிவிட பாகிஸ்தான் முயற்சிப்பதாக மக்களவையில் குற்றம்சாட்டப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற உடனடிக்கேள்வி நேரத்தின்போது பஞ்சாபில் சீக்கியர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஜெகதீஷ்கக்னேஜா அண்மையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இச்சம்பவத்தால் மாநில அரசு பீதியடைந்துள்ளதால், மாநிலத்தில் பிரச்னையை உருவாக்க யாரோ தீயசக்திகள் முயற்சிப்பது போல் உள்ளதால் கூடுதல் துணை ராணுவப் படையினர் வேண்டும் என வலியுறுத்தியது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீர் பண்டிட்டுகளை பள்ளத்தாக்குப்பகுதியில் இருந்து வெளியேற்றியதுபோல், அங்கு உள்ள சீக்கியர்களை வெளியேற்ற பஞ்சாபில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயலுகிறது.எனவே, உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "நாளுக்குநாள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமை மோசமடைந்துவருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்துவெளியிட வேண்டும்' என்றார்.

நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளின் எல்லைகளின் அருகே கள்ள நோட்டுப் புழக்கம், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை அதிகரித்துவருகின்றன என்றும் இதுகுறித்து தேசியப்புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாஜக எம்.பி. யோகி ஆதித்ய நாத் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...