கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:
நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப் படுகின்றது. அனைவருடைய வாழ்விலும் அமைதியும், வளமும்பெருகி, மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அறிவுரை, மனிதநேயத்தை பாதுகாக்கும் கொள்கையாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில் நாட்டுமக்கள் வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
1oughtn’t