மாண்புமிகு தமிழக முதல்வருக்கு

வணக்கம்,தங்கள் ஆட்சியில் குறைபாடுகள் மெல்ல,மெல்ல ஆரம்பித்துவிடுமோ என நினைக்கும் அளவிற்க்கு தங்களது தலைமையிலான அரசு செயல்பட தொடங்கிவிட்டது.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார்துறையினை வளர்த்துவிடுவதில் எங்களுக்கு அச்சமில்லை.அரசு

மருத்துவமனைகளின் இன்றைய தரம் என்னவென்று ஆய்வு செய்து பார்த்தீர்களானால் தெரியவரும்.தாங்கள் எதிர்கட்சிதலைவராக இருக்கும்போது அரசு துறையை திமுக அரசு பலவீனமடைய செய்கின்றது என்றும்,அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை விட தனியார் மருத்துவமனை மூலம் சுயலாபம் அடைகிறார்கள் என்றீர்கள்.ஆனால் தற்சமயம் நடக்கப்போவது என்ன?

அரசு மருத்துவர்களின் போராட்டத்தை கையாண்டது போல முழுமையாக அரசு நிர்வாகத்தினை கையாண்டாலே தமிழ் நாடு சுபிட்சம் அடையும்.

ஆரம்ப சுகாதார நிலையம்,வட்டார தலைமை மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் தரம் நிதியினால் மட்டும் உயர்த்தப்படாமல் செயல்பாடுகளின் மூலம் உயர்த்தப்படுமானால் மருத்துகாப்பீடு திட்டம் தேவையற்றதாக மாறிவிடும்.

மக்கள் தங்களிடம் வாய்ப்பைதான் தர முடியும்.பெற்ற வாய்பினை தொலை நோக்கு பார்வையுடன் தேவையறிந்து செயல்படுத்தும் பொறுப்பு தங்களுடையது.

மக்களுக்கு மட்டும் தங்களை செப்பனிடும் பணி தெரிந்திருந்தால் இலவச வேட்டி சேலைக்கும்,இலவச ஆடு,மாடுகளுக்கும்,இலவச அரிசிக்கும் அரசிடம் கையேந்தமாட்டார்கள்.

தனி மனிதனின் பலவீனத்தை குறைக்கும் அளவிற்க்கு ஓர் அரசு செயல்பட வேண்டுமே தவிர பலத்தை குறைக்கும்படி நடக்ககூடாது.

இன்று காவல் நிலையங்களின் செயல்பாடு போற்றும் வகையில் உள்ளது.மிரட்டி கையக்கப்படுத்திய நிலங்கள் இன்று மீண்டும் உரியவர்களுக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.இதுதான் அரசின் சிறப்பு.

சிறப்பான விஷயங்கள் அங்கொன்றும்,இங்கொன்றும் இல்லாமல் பரவாலாக்கப்படவேண்டும்.5 வருட ஆட்சியில் பயனாளிகள் தேவையறிந்து செயல்பட்டால் தமிழ் நாடு ஆரோக்கியம்மடையும்.

மாறாக அனைவருக்கும் இலவசம் என்பத்னை தவிர்த்து தேவைபடுவோருக்கு தேவையானதை தர முயற்சித்தீர்களானால் தங்கள் அரசு மக்கள் அரசாக நிலை பெற முடியும்

தங்களுக்கோ அல்லது தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கோ உடல் நிலை கோளாறு என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கோ [அ] வட்டார தலைமை மருத்துவமனைக்கோ [அ] மருத்துவ கல்லூரி மருத்துவமனைகக்கோ செல்லாமல் உலகத்தரம் வாய்ந்த தனியார் மருத்துமனைக்கு சென்றீர்களானால் சாமன்யர்களும் தனியார் மருத்துவமனைக்கே செல்ல விரும்புவார்கள்..

தனியார் மருத்துமனைகளால்தான் மக்களின் உடல் நிலையை சரி செய்ய முடியும் எனில் அரசு நிர்வாக மருத்துமனைகள் எதற்க்கு?அரசு நிர்வாகத்திற்க்கு துணையாகத்தான் தனியார் மருத்துவ மனைகள் இருக்க முடியுமே ஒழிய எதிர்பதம்மாக இருக்க முடியாது என்பதே திண்ணம்.

தங்களுடைய ஆர்வம்,விருப்பம் புரிகின்றது.ஆர்வம்,விருப்பம் இவைகளுடன் பயணிக்கும் பாதையும் மிகமிக முக்கியம் அல்லவா.பாதையில் பிரச்சனையில் என்றால் நாம் நினைக்கும் இடத்திற்க்கு சென்று சேர கால தாமதம்மாகுமே ஒழிய வேறோன்றும்மில்லை.உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அறிவியலில் இரண்டு வகை உண்டு.

1.INTROVERT

2.EXTROVERT

இன்றைய தேதி வரை நம் கல்வி நிலையங்கள் இரண்டாம் வகையினையே பின்பற்றுகின்றன.முதல் வகை அறிவியலை நடத்திப்பாருங்கள்.மிகப்பெரிய மாற்றம் தெரியும்.இதைத்தான் மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே மேல் என சொல்லியுள்ளனர்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் நன்கு ஆலோசனை செய்து EXTROVERT SCIENTIST ஐ விட INTROVERT SCIENTIST உடன் கலந்துரையாடினால் தங்களது விருப்பம் நிறைவேறும்.

தமிழகம் முதன்மை மாநிலம்மாக மாறும் ..

 

வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

என்றும் தாயகப்பணியில்

Dr. ந.இளவரசன் B.P.T 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...