ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி காரணமாக அவரால் நாட்டில் ஏற்பட்டுவரும் எந்தவித மாற்றத்தையும் காணமுடியாது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், இந்தியாபாகிஸ்தான் எல்லையில் நிலவும்சூழல் மாறியுள்ளது. ஆனால், ராகுல் காந்தியோ எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். இத்தாலியக் கண்ணாடியை அவர் அணிந்திருப்பதால், அவரால் மாற்றத்தைக் காணமுடியாது.


பிரதமர் மோடி தலைமையிலான கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது? என்று சில நாள்களுக்கு முன்பு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியின் மதிப்பெண் அறிக்கையை (சாதனைப் பட்டியலை) நான் வைத்திருக்கிறேன். ஆனால், அதுநீண்டதாக இருப்பதால் ராகுலிடம் காண்பிக்க இயலாது. பாஜக அரசின் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பமுடியவில்லை என்பதே எங்களது மிகப்பெரிய சாதனையாகும்.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதை மக்கள் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். அந்தப்பணம் என்னவானது என்று மக்கள் ராகுலைப் பார்த்து கேட்கின்றனர்.


குஜராத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. அதன் 40 ஆண்டுகால ஆட்சியில் 24 மணி நேர மின்சாரத்தையும், குடிநீரையும் வழங்கவில்லை. அவற்றை, மோடி தலைமையிலான குஜராத் அரசுதான் வழங்கியது. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மதவன்முறைகள் நிகழ்ந்ததால், ஊரடங்கு உத்தரவுகள்தான் பிறப்பிக்கப்பட்டன. நாங்களோ ஊரடங்கு உத்தரவு இல்லாத ஆட்சியை ஏற்படுத்தினோம் .

 

குஜராத் மாநிலம், தாபி மாவட்டத்தில் உள்ள வியாரா நகரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...