நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட உணவுபூங்கா

நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட உணவுபூங்கா அமைய முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

யோகா குரு பாபா ராம் தேவ் தன்னுடைய ‘பதாஞ்சலி’ குழுமம் மூலம் மூலிகைபொருட்களை நாடு முழுவதும் விற்பனைசெய்து வருகிறார். இதையொட்டி, நாக்பூர் மிகான் பகுதியில் பிரமாண்ட உணவு மற்றும் மூலிகைபூங்கா அமைக்க மாநில அரசிடம் அனுமதி கோரினார்.

இதற்காக அவருக்கு நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ‘‘பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கீடுசெய்தது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது. ஏக்கர் தலா ரூ.25 கோடி வீதம் பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கப் பட்டது’’ என்றார்.

இந்த மாபெரும் உணவுபூங்கா மூலம் சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய பாபாராம்தேவ், பதாஞ்சலி குழுமம் விவசாயிகளுக்கு வேளாண்பொருள் உற்பத்திசெய்ய கடன் உதவி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...