2 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில், ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு ஒப்புதல்

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா அடுத்துள்ள நிம்மலூருவில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) நிறுவனத்தின், ராணுவத்தேவைகளுக்கான கண்காணிப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட மத்திய தகவல்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர்தான் நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கிச்செல்கிறது. பிரதமரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுபவர்கள். மாநில பிரிவினையால் பெருநஷ்டம் அடைந்துள்ள ஆந்திராவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவரவே இங்கு பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில், ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், இரவு நேரத்தில் கூட சுமார் 3 கிமீ தூரத்தை கண்காணிக்க உதவும் லென்ஸ் தயாரிக்கப்பட உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களில் 87 சதவீதம் நாட்டின் பாதுக்காப்புக்கு தொடர்புடையதாகும்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்துமட்டுமே வேண்டுமென நான் உட்பட பலர் ஆசைப் பட்டது உண்மை. ஆனால், ஆந்திராவின் 28 கோரிக்கைகளில் சிறப்பு அந்தஸ்தைத்தவிர, மற்ற 27 கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடுமிகவும் பலவீனமடைந்து விட்டது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...