இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்

ஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.

ஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். தமது

சீடர் ஒருவரை அழைத்தார். சகஸ்ரநாம_சுவடியை எடுத்துவரச் சொன்னார். சீடர் எடுத்துவந்த சுவடியைப்பிரத்தார் சங்கரர். அது லலிதா சகஸ்ரநாம சுவடி அல்ல. விஷ்ணு சகஸ்ரநாம சுவடியாக_இருந்தது!

'இந்த சகஸ்ரநாமம் அல்ல; அம்பிகை பற்றிய_சகஸ்ரநாத்தை எடுத்து வா!' என்று  கூறினார் சங்கரர். சீடன் இரண்டாவது முறை எடுத்து வந்த சுவடியும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மற்றொரு பிரதியாகவே இருந்தது!

ஆதிசங்கரர், சற்றே கண்மூடித் தியானித்தார். 'சங்கரரே! நீங்கள் எனது சகோதரன் பெருமையைக் கூறும் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கே உரை எழுதுங்கள். எனது சகஸ்ரநாமத்துக்கு உரையெழுத, மற்றொருவர் பூமியில் தோன்றப் போகிறார்!' என அம்பிகை அசரீரியாகக் கூறியருளினாள்.

அம்பிகை குறிப்பிட்ட அந்த அருளாளர்தான், மகான் பாஸ்கர ராயர், மராட்டிய மாநிலத்தில் தோன்றி, தமிழ்நாட்டில் குடியேறி, லலிதா சகஸ்ரநாமத்துக்கப் பேருரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வியாச முனிவர் வருணித்த திருவிளையாடல்கள் அனைத்தையும் குருவாயூரப்பன் நிகழ்த்தியதாகக் கூறி, தமது நாராயணீயத்தை இயற்றினார் நாராயண பட்டத்திரி, அதில் ஒரு வரலாறு, எப்படியோ விடுபட்டுப் போனது. ஆம்! பாகவதத்தில் உள்ள மிக முக்கியமான வரலாறுகளில் ஒன்றான ஜடபரதர் சரித்திரம், நாராயணீயத்தில் இடம்பெறவில்லை.

அண்மைக் காலத்தில், நாராயணீயத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதனைப் பிரபலமாக்கிய சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள், பட்டத்திரி எழுதாமல் விடுத்த ஜடபரதர் சரித்திரத்தை இயற்றி நாராயணீயத்துடன் இணைத்துள்ளார்கள்! தீட்சிதர் அவர்களின் திருவுருவப் படம் குருவாயூர் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளது. அதனால் தமிழகம் பெருமை பெற்றது!

இவ்விரு நிகழ்ச்சிகளும், ஞானநூல்கள் கடவுள் திருவருளால் தீர்மானிக்கப்படுபவை என்பதை உணர்த்துகின்றன. அதைப் போலவே மாணிக்கவாசகருடைய வரலாற்றை, 'கடவுள் மாமுனியர்' இயற்றவேண்டுமென்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டதால், அது சுந்தரர் மற்றும் சேக்கிழாரின் நூல்களில் இடம் பெறவில்லை போலும்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...