இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்

ஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.

ஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். தமது

சீடர் ஒருவரை அழைத்தார். சகஸ்ரநாம_சுவடியை எடுத்துவரச் சொன்னார். சீடர் எடுத்துவந்த சுவடியைப்பிரத்தார் சங்கரர். அது லலிதா சகஸ்ரநாம சுவடி அல்ல. விஷ்ணு சகஸ்ரநாம சுவடியாக_இருந்தது!

'இந்த சகஸ்ரநாமம் அல்ல; அம்பிகை பற்றிய_சகஸ்ரநாத்தை எடுத்து வா!' என்று  கூறினார் சங்கரர். சீடன் இரண்டாவது முறை எடுத்து வந்த சுவடியும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மற்றொரு பிரதியாகவே இருந்தது!

ஆதிசங்கரர், சற்றே கண்மூடித் தியானித்தார். 'சங்கரரே! நீங்கள் எனது சகோதரன் பெருமையைக் கூறும் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கே உரை எழுதுங்கள். எனது சகஸ்ரநாமத்துக்கு உரையெழுத, மற்றொருவர் பூமியில் தோன்றப் போகிறார்!' என அம்பிகை அசரீரியாகக் கூறியருளினாள்.

அம்பிகை குறிப்பிட்ட அந்த அருளாளர்தான், மகான் பாஸ்கர ராயர், மராட்டிய மாநிலத்தில் தோன்றி, தமிழ்நாட்டில் குடியேறி, லலிதா சகஸ்ரநாமத்துக்கப் பேருரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வியாச முனிவர் வருணித்த திருவிளையாடல்கள் அனைத்தையும் குருவாயூரப்பன் நிகழ்த்தியதாகக் கூறி, தமது நாராயணீயத்தை இயற்றினார் நாராயண பட்டத்திரி, அதில் ஒரு வரலாறு, எப்படியோ விடுபட்டுப் போனது. ஆம்! பாகவதத்தில் உள்ள மிக முக்கியமான வரலாறுகளில் ஒன்றான ஜடபரதர் சரித்திரம், நாராயணீயத்தில் இடம்பெறவில்லை.

அண்மைக் காலத்தில், நாராயணீயத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதனைப் பிரபலமாக்கிய சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள், பட்டத்திரி எழுதாமல் விடுத்த ஜடபரதர் சரித்திரத்தை இயற்றி நாராயணீயத்துடன் இணைத்துள்ளார்கள்! தீட்சிதர் அவர்களின் திருவுருவப் படம் குருவாயூர் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளது. அதனால் தமிழகம் பெருமை பெற்றது!

இவ்விரு நிகழ்ச்சிகளும், ஞானநூல்கள் கடவுள் திருவருளால் தீர்மானிக்கப்படுபவை என்பதை உணர்த்துகின்றன. அதைப் போலவே மாணிக்கவாசகருடைய வரலாற்றை, 'கடவுள் மாமுனியர்' இயற்றவேண்டுமென்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டதால், அது சுந்தரர் மற்றும் சேக்கிழாரின் நூல்களில் இடம் பெறவில்லை போலும்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...